9 மாதங்களில் 1,000 குவிண்டால் கஞ்சா பறிமுதல்.. டிஜிபி அபய்..!

Default Image

கடந்த 9 மாதங்களில் 1,000 குவிண்டால் கஞ்சாவைக் கைப்பற்றியதாகக் ஒடிசா போலீசார் கூறினர்.

ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 1054 குவிண்டால் கஞ்சாவை ஒடிசா மாநில போலீசார் பறிமுதல் செய்தனர். 1,054 குவிண்டால்களில், 413 குவிண்டால் கோரபுட் மாவட்டத்தில் இருந்தும்,  240 குவிண்டால் மல்கன்கிரியில் பறிமுதல் செய்யப்பட்டது என டிஜிபி அபய் தெரிவித்தார்.

“கஞ்சா சாகுபடியைக் கண்டுபிடிக்க இஸ்ரோ செயற்கைக்கோள்கள் எங்களுக்கு உதவுகின்றன” என்று டிஜிபி கூறினார். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்சிபி) பதிவுகளின்படி, ஆந்திரா கடந்த 2017 ஆம் ஆண்டில் சுமார் 780 குவிண்டால் கஞ்சாவைக் கைப்பற்றியது.

2020 ஆம் ஆண்டின் பதிவுகள் என்.சி.பியால் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஒடிசா காவல்துறை அதிகாரிகள், கஞ்சா பறிமுதல் பட்டியலில் முதலிடம் வகிப்பார்கள், ஏனெனில் இது இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 12,00 குவிண்டால் கஞ்சாவை கைப்பற்றுவோம் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்