100 வயதான தனது தாயை கட்டிலோடு வங்கிக்கு இழுத்து சென்ற மகள்.!

Published by
பால முருகன்

ஒடிசா மாநிலத்தில்  100 வயதான தனது அம்மாவை கட்டிலோடு வங்கிக்கு இழுத்து சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொரனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு ஏழைகள் தொழிலுக்கு செல்லாமல் வறுமையில் இருக்கிறார்கள், இதை கருத்தில் கொண்ட பிரதமர் பெண்களின் ஜன்தன் வாங்கி கணக்கில் மாதம் தலா ரூ. 500 என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டது. அந்த உதவி தொகை பெற்றவர்களில் ஒருவர்  ஒடிசா மாநிலத்தில் பர்கோன் கிராமத்தை சேர்ந்த 100 வயதுக்குமேல் ஆன மூதாட்டி லாபே பாகல்,  இவர் தனது வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார், மேலும் வீட்டில் இருக்கும் இவர்  இவரது வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருக்கும் பணத்தை பெற்று வர முடியவில்லை .

மேலும் இந்த நிலையில் இவருடைய மகள் புன்ஜிமாதி தேய் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் கடந்த 9ம் தேதி தங்கள் கிராமத்தில் உள்ள கிராம வங்கிக்கு சென்று மானேஜரை சந்தித்து தனது தயார் இருக்கும் நிலையை விளக்கிக் கூறி தனது தாய் வரமுடியாத நிலையில் இருப்பதால் அவரது வங்கி கணக்கில் உள்ள 1500 ரூபாய் வழங்குமாறு கேட்டுள்ளார்.

இதற்கு மானேஜர் உங்கள் தாய் வங்கி வைத்திருக்கும் கணக்கை வைத்திருக்கும் உங்கள் தாயாரை நேரில் அழைத்து வந்தால் மட்டுமே பணத்தை வழங்க முடியும் என்றே கூறியுள்ளார், மேலும் இதனால் ஏமாற்றமடைந்த புன்ஜிமாதி தேய் சோகத்துடன் வீடு திரும்பினார். மேலும் புன்ஜிமாதி தேய் பணத்தேவை நெருங்கியதால் தனது தாயை வங்கிக்கு கூப்பிட்டு செல்ல முடிவு செய்தார், ஆனால் வாகன வசதி எதுவும் கிடைக்கவில்லை இதனால் கட்டிலில் எலும்பு தோலுமாக கிடந்த தனது தாயை அவர் படுத்திருந்த கட்டிலில் கயிறு கட்டி வெயிலில் இழுத்து சென்றுள்ளார்.

இதனை பொதுமக்கள் பரிதாபமாக பார்த்து சிலர் புகைப்படம் எடுத்து இணையதளத்திலும் வெளியிட்டனர், இதை பற்றி புன்ஜிமாதி தேய் கூறியது ” எனக்கு வேறு வழி தெரியவில்லை அதனால் தான் என்னுடைய தாயை கட்டிலில் கயிறு கட்டி இழுத்து சென்றேன் அதற்கு பிறகுதான் எனக்கு பணம் கிடைத்தது என்றும் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்
Tags: #Odisabank

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago