கேரள அரசின் ஓணம் பரிசாக அம்மாநிலத்தில் 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் இருந்தும் வரும் சூழலில் இன்று கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 100 நாட்களில் 100 திட்டங்கள் முடிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓணம் பண்டிகையையொட்டி அரசின் நிவாரண கிட் அடுத்த 4 மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும், சமூக நல ஓய்வூதியத்தில் மேலும் ரூ.100 அதிகரிக்கப்படும் என்றும் 100 நாட்களுக்குள் 153 புதிய குடும்ப சுகாதார நிலையங்கள் நிறுவப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, 5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிகணிப்பொறி லேப்டாப் வழங்கும் வித்யா ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படும். புதிய நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கேரளாவில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…