காற்றில் பறந்த 100, 500, 2000 ருபாய் நோட்டுகள்! பண மழையில் பாதசாரிகள்!

Default Image

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒரு வணிக வளாகத்தில் சோதனை நடத்தினர். அப்போது கட்டிடத்தில் இருந்து 100, 500, 2000 நோட்டு பறந்து வந்துள்ளன. இதனை கண்ட பாதசாரிகள் அந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து சென்றனர்.
கொல்கத்தாவில் உள்ள ஹோக் வணிக வளாக கட்டிடத்தின் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த சோதனைக்கு பயந்து அங்குள்ள ஊழியர்கள்  கட்டுக்கட்டாக இருந்த பணத்தை மேல்தளத்தில் இருந்து தூக்கி எறிந்தனர். அப்போது காற்றில் வந்த அந்த ரூபாய் கட்டுகள் பிரிந்து காற்றில் சிதறி பறந்தன.
இதனை கண்ட அந்த வழியாக சென்ற பாதசாரிகள் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து சென்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர். புலனாய்வு துறை சோதனைக்கு பயந்துதான் இப்படி ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் தூக்கி செறிந்ததாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்