Bihar Assembly [file image]
பீகார் : பீகார் மாநில சட்டசபையில், அரசு ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் மசோதாவை நிறைவேற்றியது.
போட்டித் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் தேர்வில் வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி இந்த சட்டத்தை முன்வைத்தார்.
நீட் வினாத்தாள் கசிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பீகார் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பீகார் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் விதிகளின்படி, அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் அனைத்து போட்டி ஆட்சேர்ப்பு மற்றும் நுழைவுத் தேர்வுகள் அதன் ஆணையின் கீழ் வரும்.
அதன்படி, பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், பீகார் யுனிவர்சிட்டி சர்வீஸ் கமிஷன், பீகார் ஸ்டாஃப் சர்வீஸ் கமிஷன், பீகார் டெக்னிக்கல் சர்வீசஸ் கமிஷன், சென்ட்ரல் செலக்ஷன் போர்டு ஆஃப் கான்ஸ்டபிள்ஸ், பீகார் போலீஸ் சப்-ஆர்டினேட் சர்வீசஸ் கமிஷன் மற்றும் பிற அறிவிக்கப்பட்ட அதிகாரிகள் மசோதாவின் கட்டளையின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வின் போது தாள் கசிவுக்கான செய்திகளில் வந்த நிலையில், தேர்வு பிபிஎஸ்சியால் ரத்து செய்யப்பட்டு, இந்த மாதம் மீண்டும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…