உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.
உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என கூறி ரத்து செய்ய வழக்கு தொடரப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்பி ஆர்எஸ் பாரதி தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பாத், திரிவேதி, பார்டிவாலா ஆகியோரை கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.
அப்போது, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் முறையை ரத்து செய்ய கோரிய விவகாரத்தில் வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. எந்தெந்த விஷயங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்பதை சுருக்கமான வரைவாக தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இந்த வழக்கில் எந்த மாநில அரசு வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதன்பின் வழக்கு மீண்டும் செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் நிலை குறித்தும், வழக்கு குறித்தும், எப்போது விசாரணை நடத்தப்படும் என்ற தேதிகள் அன்றைய தினம் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…