வட மாநிலங்களில் பத்து நாட்கள் தசரா பண்டிகை நடைபெறும்.இந்த பண்டிகையின் பொது இடங்களில் துர்க்கை அம்மன் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் தசரா பண்டிகை முடிவடைந்ததைத் தொடர்ந்து பொது இடங்களில் வைக்கப்பட்ட துர்க்கை அம்மன் சிலைகளை ஆறுகள் மற்றும் குளங்களில் கரைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
அப்போது ராஜஸ்தான் தோல்பூர் பகுதியில் ஒரு துர்க்கை அம்மன் சிலையை அங்கு உள்ள பர்பதி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆற்றில் குதித்த ஒரு சிறுவன் மூழ்கியதை தொடர்ந்து அவனை காப்பாற்ற அடுத்தடுத்து தொடர்ந்து பலர் குதித்தனர்.
இதில் 10 பேர் நீரில் மூழ்கினர்.அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இறுதியாக 10 பேரும் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…