இலவசமாக இந்தியாவிற்கு 1.7 லட்சம் முழுகவச உடைகளை அளித்துள்ளது சீனா.!

Published by
மணிகண்டன்

உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் நம் நாட்டையும் தாக்கி வருகிறது. இதுவரை இந்தியாவில் 4,421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், இந்தியாவில் பாதுக்காப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு பயன்படும் முழுகவச உடைகள் இதுவரை 20,000 கவச உடைகள் உள்நாட்டில் வாங்கப்பட்டுள்ளதாம். இதனுடன் சேர்த்து 1 லட்சத்து 90 முழுஉடல் கவசம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாம்.

இந்தியாவில் ஏற்கனவே 3,87,473 கவச உடைகள் உள்ளன. இதுவரை 2.94 லட்ச கவசஉடைகள் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மேலும், 80 ஆயிரம் கவச உடைகளை சிங்கப்பூர் நிறுவனத்திடம் இருந்து வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில், சீன அரசானது இந்திய அரசிற்கு 1.70 லட்சம் முழு உடல் கவச உடைகளை (பிபிஇ ) இலவசமாக வழங்கியுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டிருந்தபோது, இந்தியாவிலிருந்து மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்ய  விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க சீன அரசானது, இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. சீனாவின் கோரிக்கையை ஏற்று இந்திய அரசானது உடனடியாக ஏற்றுமதி தடையை நீக்கி சீனாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்தது. அதற்கு நன்றிக்கடனாக சீன அரசு தற்போது முழுஉடல் கவச உடைகளை இலவசமாக இந்தியாவிற்கு வழங்கியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

14 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

14 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

14 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

14 hours ago