உயிரிழந்த இராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.
கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் இருந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருபதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து, பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் போலீசாருடன், பாதுகாப்புப்படையினர் இணைந்து ஈடுபட்டு வந்தனர். அப்போது, நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை மோதலில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சேபோய் மணிஷ் என்ற வீரர் படுகாயம் அடைந்தார்.
அவரை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மணிஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று அவரது உடல் மத்திய பிரதேசம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, சேபோய் மணிஷ் உடலுக்கு மத்திய பிரததேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேபோய் மணிஷ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். மேலும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…