நாளை நடைபெறவுள்ள ‘பூமி பூஜை’ நிகழ்ச்சியில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘ரகுபதி லட்டு’ விநியோகிக்கப்படும்
அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள பிரமாண்டமான ராமர் கோயில் விழாவில் பிரதமர் அடிக்கள் நாட்டவுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு முக்கிய பிரமுகர்கள் 175 பேருக்கு மட்டுமே அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.
பாட்னாவின் மகாவீர் மந்திர் அறக்கட்டளை நாளை அயோத்தியில் உள்ள ராம் கோயிலின் ‘பூமி பூஜை’ நிகழ்ச்சியில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘ரகுபதி லட்டு’ விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட லட்டுக்களில், 51,000 லட்டுக்கள் கோயிலின் அஸ்திவார விழாவை முன்னிட்டு ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ANI செய்தி நிறுவனிடம் பேட்டியளித்த ஆச்சார்யா கிஷோர் குணால் “அயோத்தி ‘ பூமி பூஜை ’நிகழ்ச்சியில் 1,25,000 லட்டுகளை ‘ ரகுபதி லட்டு ’என்ற பெயரில் விநியோகிக்கப்படும். 51,000 லட்டுக்கள் ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையில் ஒப்படைக்கப்படும்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் மீதமுள்ள லடூக்கள் பீகாரில் உள்ள சீதாமாரியில் உள்ள ஜானகியின் பிறந்த இடத்திலும், சுமார் 25 புனித யாத்திரை இடங்களிலும் உள்ள கோயில்களுக்கு அனுப்பப்படும். நாளை பீகாரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராம் மற்றும் ஹனுமான் பக்தர்களிடையே லட்டுகள் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த லட்டுக்கள் தூய மாடு நெய் கொண்டு தயாரிக்கப்படுகின்றன என்று குணால் மேலும் கூறினார்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…