இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு!

Default Image

இடுக்கியில் வயல்பகுதியில் சிக்கிய 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு.

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மறையூர் அருகே உள்ள புளிகரை வயல்பகுதியில், ஏஞ்சல் என்பவருக்கு சொந்தமான வயல்பகுதியில், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வயலில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பார்த்த தொழிலாளர்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில்  இடத்திற்கு, பற்காம்புப்பிடிக்கும் பயிற்சி பெற்ற, வனத்துறை பணியாளர் செல்வராஜுடன் வந்த வனத்துறையினர், அந்த மலைப்பாம்பை பிடித்து, சின்னார் வனப்பகுதியில் விட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்