ஹைதராபாத்தில் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து 1 வயது குழந்தை உயிரிழப்பு

Default Image

ஹைதராபாத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நான்காவது மாடியில் வசித்து வந்த சிவகுமார் மற்றும் அனிதா தம்பதியினரின் ஒரு வயது  குழந்தை அக்ஷரா 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

இது பற்றி எம் நரேந்தர், இன்ஸ்பெக்டர் (ஹபீப்நகர்) கூறுகையில், அக்ஷராவின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், அவர்கள் வேலைக்கு அல்லது ஷாப்பிங்கிற்கு வெளியே செல்லும்போதெல்லாம், அவர்கள் குழந்தையை அதே கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் வசிக்கும் அவரது பாட்டியிடம் விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்படி புதன்கிழமை மதியம், குழந்தையை பாட்டியுடன் விட்டுவிட்டு பெற்றோர் வெளியே சென்றனர்.அக்ஷரா விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டை விட்டு வெளியே வந்து பால்கனியின்  இடையில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. “குழந்தை ஐந்தாவது மாடியில் இருந்து சாலையில் விழுந்துள்ளாள்.அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு நிலூஃபர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அங்கு அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்