ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அனுமதி …!தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

Default Image

தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக இன்று இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்,
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.குழு ஆய்வு செய்து ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முடிவு எடுக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதன் பின் வாதாடிய  வேதாந்தா நிர்வாகம், ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும்  வேதாந்தா நிறுவனம் வாதிட்டது.
அதேபோல் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு 6 வாரங்களில் ஆய்வு செய்து முடிவெடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்