வேறு ஒருவரின் இல்லத்துக்குள் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் போராட்டம் நடத்த உரிமை இல்லை! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து

Default Image

டெல்லி உயர்நீதிமன்றம் , டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வேறு ஒருவரின் இல்லத்துக்குள் சென்று போராட்டம் நடத்த உரிமை இல்லை என தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் அவரது அமைச்சர்கள் உள்ளிட்ட 4 பேர் துணை நிலை ஆளுநர்  அனில் பைஜால் மாளிகை வரவேற்பறையில் கடந்த திங்கட் கிழமை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர்.

இதற்கு எதிரான ஒரு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இதுபோன்று தர்ணா நடத்த அனுமதி கொடுத்தது யார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பெயர் போராட்டம் அல்ல என்று கூறிய நீதிபதிகள் இன்னொருவரின் வீட்டுக்குள்ளோ, அலுவலகத்துக்குள்ளோ சென்று போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்