விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப்போவதாக வாக்குறுதி அளித்துள்ள கர்நாடக முதலமைச்சர் இதற்கான நிதியாதாரத்தைப் பெற மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற குமாரசாமி, 85 லட்சம் விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்களைத் தீர்க்க உதவுமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். கடன் தொகையில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றும் குமாரசாமி கோரியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அவர், மத்திய அரசின் ஆதரவை நாடியிருப்பதாக கூறினார். வறட்சி காரணமாக விவசாயிகளின் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது என்று கூறிய குமாரசாமி கூட்டணியில் ஏற்பட்ட இழுபறிகளால் கடன் தள்ளுபடி தாமதமாவதாக கூறினார். முன்னதாக கடன்களைத் தீர்ப்பதற்காக விவசாய சங்கங்களிடம் அவர் 15 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார்.அந்தக் காலக்கெடு முடிவுக்கு வந்த பிறகும், மத்திய அரசின் தயவை கர்நாடக அரசு நாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…