வங்கி மோசடி:நீரவ் மோடியின் சகோதரர் துபாயில் இருந்து தங்க நகைகளுடன் ஓட்டம்..!!

Default Image

பஞ்சாப் வங்கி மோசடி வெளி உலகுக்கு தெரிய வந்த மறுகணமே, துபாயில் இருந்த நீரவ் மோடியின் சகோதரர் நெஹல் ((nehal)) 50 கிலோ தங்க நகைகளுடன் ஓட்டம் பிடித்து விட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

வழக்குப்பதிவிற்கு முன்னதாக, நீரவ் மோடியின் உடன்பிறவா சகோதரரான நெஹல் துபாயில் 50 கிலோ தங்க நகைகளை கடைகளுக்கு கொண்டு செல்வதற்காக தயாராக இருந்துள்ளார். ஆனால் நீரவ் மோடி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியதை தெரிந்து கொண்ட நெஹல், எங்கே நகைகள் பறிபோய் விடுமோ என்ற எண்ணத்தில், வெளிநாடுகளில் உள்ள நீரவ் மோடியின் கடைகளுக்கு நகைகளை அனுப்பி வைத்து விட்டு மாயமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையில் நெஹலின் பெயர்  இல்லை. ஆனால் அமலாக்கத்துறை, தனது குற்றப்பத்திரிக்கையில் அவரது பெயரை சேர்த்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்