Categories: இந்தியா

‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிக்கை ஆசிரியர் சுட்டுக்கொலை பயங்கரவாதிகள் சிசிடிவி கேமிராவில் சிக்கினர் ..!

Published by
Dinasuvadu desk
ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியாகும் ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிக்கையின் ஆசிரியர் ஷுஜாத் புகாரியை நேற்று மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்கள். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளர் ஷுஜாத் புகாரி (வயது 53), அமைதி தீர்வில் மிகவும் நம்பிக்கை கொண்டவர், அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பள்ளத்தாக்கு பகுதியில் பதட்டத்தை மேலும் அதிகரிக்க செய்து உள்ளது. பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் மாநில போலீசும் விசாரணையை அதிதீவிரப்படுத்தி உள்ளது.
காஷ்மீர் போலீஸ், பத்திரிக்கையாளர் ஷுகாத் புகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிளில் செல்லும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ளது.

சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உள்ள போலீஸ் குற்றவாளிகளை அடையாளம் காணவும், அவர்களை பிடிக்கவும் பொதுமக்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து உள்ளது. போலீஸ் வெளியிட்டு உள்ள காட்சியில் பயங்கரவாதிகள் அவர்களுடைய முகத்தை மூடியுள்ளனர். ஷுஜாத் புகாரியுடன் அவருடைய தனிப்பட்ட பாதுகாவலர்கள் இருவரும் நேற்றைய பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். ஷுஜாத் புகாரி பல ஆண்டுகளாக தி இந்து பத்திரிக்கைக்கு சிறப்பு செய்தியாளராக பணியாற்றி உள்ளார். ஷுகாத் புகாரி கொல்லப்பட்டதற்கு அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டு உள்ள செய்தியில் பத்திரிக்கையாளர் ஷுஜாத் புகாரி கொல்லப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சி மற்றும் வேதனை அளிக்கிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

14 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

14 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

14 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

14 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

15 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

15 hours ago