ரெஹானா பாத்திமாவை பணியில் இருந்து நீக்கியது பி.எஸ்.என்.எல்…!!

Default Image

இணையத்தில் சர்ச்கைக்குரிய கருத்தை பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட ரெஹானா பாத்திமாவை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த, 29 வயதான ரெஹானா பாத்திமா, அதிரடிப்படை சீருடை, ஹெல்மெட் அணிந்து, சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயற்சி செய்தார். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக, கோவிலுக்குள் நுழைய முடியவில்லை.

இந்நிலையில், ரெஹானா பாத்திமா, தனது பேஸ்புக் பக்கத்தில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ரெஹானாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பிஎஸ்என்எல் நிறுவனம், ரெஹானாவை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்