ரெப்போ (4%) மற்றும் ரிவர்ஸ்-ரெப்போ (3.35%) வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
வங்கிகளுக்கான குறுகியக் கால கடன் (ரெப்போ) வட்டி விகிதத்தில் (4%) மாற்றம் இல்லை என்று ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக,நிதிக் கொள்கைகளை வெளியிட்டு ஆர்பிஐ ஆளுநர் கூறியதாவது:
“பணவியல் கொள்கைக் குழு (MPC) கொள்கை ரெப்போ விகிதத்தை 4% ஆக வைத்திருக்க ஒருமனதாக வாக்களித்தது.இதனால்,அதில் எந்தவித மாற்றமும் இல்லை.மேலும்,MSF வட்டி விகிதம் மாறாமல் 4.25% ஆக உள்ளது.அதைப்போல,ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாறாமல் 3.35% ஆக உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மற்றும் மாநில வாட் வரி(VAT) உள்ளிட்ட சமீபத்திய குறைப்புக்கள் வாங்கும் திறனை அதிகரிப்பதன் மூலம் நுகர்வு தேவையை ஆதரிக்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் முதல் அரசாங்க நுகர்வு அதிகரித்து வருகிறது, ஒட்டுமொத்த தேவைக்கு ஆதரவளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர்,2021-22 இல் CPI பணவீக்கம் 5.3% ஆக இருக்கும். இது Q3 இல் 5.1%, மற்றும் Q4 இல் 5.7% ரிஸ்க் பரந்த அளவில் சமநிலையில் உள்ளது.
2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 17.2% ஆகவும், 2022-23 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 7.8% ஆகவும் இருக்கும்.மேலும்,உண்மையான ஜிடிபி GDP வளர்ச்சிக்கான கணிப்பு 2021-22 இல் 9.5% ஆக உள்ளது, இது மூன்றாவது (Q3 இல்)காலாண்டில் 6.6% மற்றும் Q4 இல் 6% ஆகும்.
இனி ராபி பயிர்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதால் காய்கறி விலைகள் குளிர்கால வருகையுடன் பருவகால சரிவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”,என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…