Categories: இந்தியா

ரூ 73,00,000 காற்றுக்கு விலை….அரங்கேறும் வினோதம்…!!

Published by
Dinasuvadu desk

ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் செக்டார் 85 க்கு அருகில் கோத்ரேஜ் நிறுவனம் கட்டியுள்ள அடுக்ககங்களில் இருக்கும் காற்று சாதாரண வெளி இயற்கைச்சூழலை விட 10 மடங்கு அதிகமான தூய்மையுடையது என்கிறது கோத்ரேஜ் நிறுவனம்.
கோத்ரேஜ் நிறுவன அறிக்கையின்படி, வெளியிலிருக்கும் சூழலுக்கும் அடுக்கக பகுதியின் சூழலுக்கும் இடையிலான காற்றின் மாசுபடுத்தும் துகள்கள் அளவு கனமீட்டர்க்கு 209 மைக்ரோ கிராமாம்.
அதாவது, வெளியில் இருக்கும் நுண்துகள்கள் கனமீட்டர்க்கு 287 மைக்ரோ கிராம். அதே இடத்திலிருக்கும் அடுக்ககத்தில் வெறும் கனமீட்டர்க்கு 18 மைக்ரோ கிராம்தானாம்.
அப்படியென்றால் இது எப்படி சாத்தியம். இயற்கையை கட்டுப்படுத்தி வேண்டியதைப் பெறுமளவுக்கு மனிதன் முன்னேறி விட்டானா?
ஒருவேளை ஆம் என்றால் எப்படி செயல்படுகிறது இந்த ”க்ளீன் ஏர் பிராஜக்ட் ” .
மையமாக நிறுவப்பட்டுள்ள காற்று சுத்திகரிப்பு முறைமை ஒன்று தேங்கியுள்ள காற்றை நிறுத்திக்கொண்டு, காற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் 2.5 மைக்ரோ துகள்களை வெளிவிடாமல் வடிகட்டுகிறது. அதோடு மட்டுமல்லாமல் அபாயகரமான சில பாக்டீரியாக்களையும் பல்க அனுமதிப்பதில்லையாம்.
ஏற்கனவே இருக்கும் காற்று சுத்திகரிப்பான்களுடன், ஆக்ஸிஜன் வழங்கும் மூலிகை செடிகளையும் முழுக்க மரங்களையும் நட்டு ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்துவோம் என்றும், மக்களின் நலன் மற்றும் இந்தத் துணைநகரத்தின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை கருத்தில் கொண்டு இதை செய்தோம் என்றும் தெரிவிக்கிறார் .
பிரீத் ஈஸி என்கிற நிறுவனம்தான் இந்த காற்று சுத்திகரிப்பு நிலையத்தை வடிவமைத்துள்ளது. பல ஆண்டுகளாக ஐரோப்பா முழுக்க பரவியிருக்கும் தொழில்நுட்பம்தான் இது. இப்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது என்கிறார் பிரீத் ஈஸி நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பருண் அகர்வால்.
அதே பகுதிகளில் இப்படி சுத்தமான காற்று உள்ளதாக விளம்பரம் செய்யப்படு விற்கப்படும் வீடுகள் ஏறக்குறைய 65.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் இங்கு குறைந்தபட்சம் 73 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
போதுமென்கிற அளவுக்கு அறிவியலாலேயே மாசுபடுத்திவிட்டு இப்போது அறிவியலாலேயே அதற்கும் விடை கண்டுபிடிக்கிறோம். அந்த காற்று சுத்திகரிப்பானுக்குள் சிறைபிடிக்கப்படும் விஷ, கார்பன டை ஆக்ஸைடு மற்றும் அபாய நுண்துகள்கள் எல்லாம் எப்படி வெளியேறும் ஒருவேளை வெளியேறினால் என்ன ஆகும் என்பதையும் அறிந்து கொண்டு இது போன்ற இயற்கை முரண்களை இனிதே வரவேற்போம்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago