Categories: இந்தியா

ரூ 50,00,00,00,00,000 இழப்பு…இந்தியாவை புரட்டி போட்ட இயற்கை சீற்றம்…20வருட கணக்கீடு..!!

Published by
Dinasuvadu desk
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால், சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில்  ஏற்பட்ட, வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட  இயற்கை சீற்றங்கள் குறித்து, ஐநாவின் பேரிடர் தடுப்பு பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், உலகளவில் மொத்தமாக ஏழாயிரத்து 255 இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவற்றால் 43 சதவீத வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர்களால், பொருளாதார பாதிப்புக்கு உள்ளான நாடுகளின் பட்டியலில், இந்தியா முதல் 5 இடங்களுக்குள் இருப்பது, ஐநா அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
முதல் இடந்த்தில் அமெரிக்காவும், 2 வது இடத்தில் சீனாவும், 3 வது இடத்தில் ஜப்பானும், 4 வது இடத்தில் இந்தியாவும்  5 வது இடத்தில்  போர்டோ ரிகோவும் உள்ளன. தொடர்ந்து  ஜெர்மனி, இத்தாலி, தாய்லாந்து, மெக்சிகோ, பிரான்ஸ் உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில் மட்டும், இந்தியாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால், சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 87 சதவீத பாதிப்புகள், அரசிடம் தெரிவிக்கப்படுவதில்லை என்பதால், இந்த தொகை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும் ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.
வெள்ளம் காரணமாக, இந்தியாவில் மட்டும், ஆண்டு தோறும், ஆயிரத்து 600 பேர் உயிரிழப்பதாகவும், ஆயிரத்து 800 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago