கடந்த மூன்றாம் தேதி மியூசியம் அமைந்துள்ள வளாகத்தில் இருக்கும் மரத்தில் கயிறு கட்டி, அதன்மூலம் உள்ளே சென்ற மர்ம நபர்கள், அங்கிருந்த நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட மூன்றடுக்கு தங்க டிபன் கேரியர், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான கப் அன்ட் சாசர், தங்க டீஸ்பூன் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இந்த திருட்டு பற்றி விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நடத்திய விசாரணையில் தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த முபீம், கவுஸ் பாஷா ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில், அவர்கள் இருவரையும் போலீஸார் இன்று கைது செய்தனர். மேலும், அவர்கள் திருடிச் சென்ற தங்க டிபன் கேரியர், தங்க டீஸ்பூன் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றினர்.முபீம், கவுஸ் பாஷாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மியூசியத்தில் இருக்கும் தங்க தகடு பொருத்தப்பட்ட குரானையும் அவர்கள் திருடிச் செல்ல முயன்றது தெரியவந்தது. மேலும், அந்த டிபன் கேரியரை திருடிச் சென்றவர்கள், அதில் உணவு சாப்பிட்டதும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் தெரிவிக்கையில், ` 2 கிலோ எடையுடைய இந்த தங்க டிபன் கேரியரின் சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய். பழமையான பொருள் என்பதால் துபாய் சந்தையில் ரூ. 30 முதல் 40 கோடி வரை விலைபோகலாம்’ என்றார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…