Categories: இந்தியா

ரூ 22,61,00,000 சொத்து….ரூ 8,89,00,000 கடன்…64 குற்ற வழக்கு….சொந்த கார் இல்லை…முதல்வர் சந்திரசேகர் ராவ்_வின் வேட்புமனுவில் தகவல்….!!

Published by
Dinasuvadu desk
தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவிடம் சொந்தமாக கார் இல்லை சொத்து மதிப்பு ரூ.22.61 கோடி
தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தற்காலிக முதல்–மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தலைவருமான சந்திரசேகர் ராவ் கஜ்வெல் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை இணைத்துள்ளார்.
அதில் தனக்கு ரூ.22.61 கோடி சொத்து இருப்பதாக சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டு உள்ளார். கடந்த 2014–ம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு ரூ.15.95 கோடி ஆகும். அந்த தேர்தலின்போது தனக்கு 37.70 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறியிருந்த சந்திரசேகர் ராவ், தற்போதைய வேட்புமனுவில் 54.24 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்–மந்திரியான சந்திரசேகர் ராவுக்கு சொந்தமாக கார் இல்லை. மேலும் இவருக்கு ரூ.8.89 கோடி கடன் இருப்பதாகவும் அந்த வேட்புமனுவில் கூறப்பட்டு உள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.1 கோடி அதிகரித்து உள்ளது.
மேலும் சந்திரசேகர் ராவ் மீது 64 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் தெலுங்கானா பிரிவினை தொடர்பான போராட்டங்களின் போது பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

6 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

12 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

12 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

12 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

12 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

12 hours ago