Categories: இந்தியா

"ரூ. 2 ஆயிரம் கள்ள நோட்டு,4 லட்சம் பறிமுதல்"5 பேர் கைது…!!

Published by
Dinasuvadu desk

கள்ள நோட்டு எங்கு அச்சடிக்கப்பட்டது, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் தானே மாவட்டம் பிவாண்டி பகுதியில் கள்ள நோட்டுக் கும்பல் ஒன்று செயல்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.
வாட்பேயில் உள்ள பான் மசாலாக்கடைக்கு வந்த கள்ள நோட்டுக்கும்பல் ஒன்று, 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை அளித்து சிகரெட்டுகளை வாங்க முயன்றது. அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் கள்ள நோட்டுக் கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். மொத்தம் 5 பேர் பிடிபட்டனவர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 203 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதானவர்கள் ரெஹான் அப்பாஸ் ஷேக் (22), முக்தர் அன்சாரி (19), அனீஸ் இக்பால் (31), கிஷேழர் புலார் (25) மற்றும் ரோஹித் சிங் (23) என்று போலீசார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிவு 489 பி, (கள்ள நோட்டுகளை பயன்படுத்துதல்), 489 சி (கள்ள நோட்டுகளை வைத்திருத்தல்), 34 (குற்ற நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
DINASUVADU

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago