Categories: இந்தியா

ரூ 1,600,00,00,000 …12 ஒப்பந்தங்கள்..3000 வேலைவாய்ப்பு…இந்தியா-பிரான்ஸ் கையெழுத்து..!!

Published by
Dinasuvadu desk

ரூ.1600 கோடி மதிப்பில் இந்தியா-பிரான்ஸ் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இந்தியா-பிரான்ஸ் வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்ற கருத்தரங்கு நடந்தது. இதில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரே சீக்லர் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்தியா-பிரான்ஸ் இடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 2009–ல் இருந்து இரட்டிப்பாகி இருக்கிறது. நாங்கள் இந்தியாவை வருவாய் ஆதாரமாகவோ, சந்தையாகவோ பார்க்கவில்லை. மாறாக உண்மையான மற்றும் விலைமதிப்பற்ற கூட்டாளியாகவே பார்க்கிறோம்’ என்றார்.

தங்கள் நாட்டை சேர்ந்த சுமார் 600 நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருவதாக கூறிய அவர், இதன் மூலம் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போதும் இந்தியா-பிரான்ஸ் நிறுவனங்களுக்கு இடையே 200 மில்லியன் யூரோ சுமார் ரூ.1600 கோடி மதிப்பில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாகவும், இதன் மூலம் மராட்டியத்தில் 3 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் சீக்லர் குறிப்பிட்டார்.

இருநாட்டு உறவுகள் இந்த எண்களையும் தாண்டி மிகப்பெரிய உயரத்தை அடையும் சாத்தியங்கள் இருப்பதாக கூறிய சீக்லர், தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி இருப்பதற்கும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

8 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

12 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

32 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

55 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago