உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வெறும் 10 ரூபாய்க்காக 20 ஆண்டுகள் பழகிய நண்பனை முடிதிருத்தும் கத்தரிக்கோலால் குத்தி கொலைசெய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியைச் சேர்ந்த அஹிபரான் லால் என்பவர் சலூன் கடை வைத்துள்ளார். அவரது நண்பரான பிரேம்பால் கங்வார் என்பவர் நேற்று மாலை கடைக்கு வந்துள்ளார். அப்போது, அவர்களுக்கிடையே 10 ரூபாய்க்காக தகராறு ஏற்பட்டுள்ளது.
நண்பர்கள் விளையாட்டாக சண்டை போடுகின்றனர் என மற்றவர்கள் நினைத்துக்கொண்டிருக்க, இருவருக்கும் இடையே நடந்த வாய்த்தகராறு கைக்கலப்பாக ஆனது. திடீரென பிரேம்பால் அஹிபரானை அடிக்க, ஆத்திரமடைந்த அவர் கையில் வைத்திருந்த முடிதிருத்தும் கத்தரிக்கோலால் பிரேம்பாலின் நெஞ்சில் வேகமாக குத்தியுள்ளார்.
மேலும், சண்டையை தடுக்க வந்த பிரேம்பாலின் இரு மகன்களுக்கும் சரமாரியாக கத்திக்குத்து விழுந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரேம்பாலை அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இருவருக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகள் பழக்கம் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக அஹிப்ரான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
DINASUVADU
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…