Categories: இந்தியா

ரூ 1,00,00,000 பரிசு…அமைச்சரின் தலைக்கு விலை….இந்தியாவில் வாழ விட மாட்டோம் என எச்சரிக்கை…!!

Published by
Dinasuvadu desk
உத்தரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என இந்து அமைப்பு அறிவித்துள்ளது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில மந்திரி சித்து தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்டார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளராக செயல்பட்டு வருகின்றார். ராம்கஞ்ச் மண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியையும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.இதனையடுத்து சித்து பேட்சால் ஆத்திரமடைந்த இந்து யுவவாகினி அமைப்பினர்  சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து யுவவாகினி அமைப்பினர் அறிவிக்கையில் ‘‘யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பஞ்சாப் மந்திரி சித்துவின் தலையை துண்டித்து கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்’’ என அறிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பின்  ஆக்ரா பிரிவு தலைவர் தருண் சிங் பேசுகையில், ‘‘சித்து பாகிஸ்தானை புகழ்கிறார். சொந்த நாட்டுக்கு எதிராக பேசுகிறார். இது மன்னிக்க முடியாதது. அவர் பாகிஸ்தானுக்கு போய் விடட்டும் அல்லது நாங்கள் அவரை இந்தியாவில் வாழ விட மாட்டோம்’’ என எச்சரித்துள்ளார்.இந்து யுவவாகினி அமைப்பு என்பது 15 வருடங்களுக்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago