Categories: இந்தியா

ரிசர்வ் வங்கி ராகுல் டிராவிட் போல செயல்பட வேண்டும்….!!

Published by
Dinasuvadu desk
ராகுல் டிராவிட் போல ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும், சித்து போல் இருக்க கூடாது என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ராகுல் டிராவிட், பொறுமையாக விளையாடி, தன் அணிக்கு வலுவான தளம் அமைத்துக் கொடுப்பது போல, ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும்”  என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் அதிகரித்து வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்  ரகுராம் ராஜன், “ கூறியிருப்பதாவது:- இரு தரப்பினரும் அவரவர் கருத்துக்களை கேட்க வேண்டும். மத்திய அரசு, கார் ஓட்டுனர் என்றால், ரிசர்வ் வங்கி, ஓட்டுனரை பாதுகாக்கும் ‘பெல்ட்’ எனலாம். அந்த பெல்ட் வேண்டுமா, வேண்டாமா என்பது, மத்திய அரசின் முடிவை பொறுத்து உள்ளது. பெல்ட் அணிந்து கார் ஓட்டினால், எதிர்பாராத நிகழ்வுகளின் போது தப்பிக்கலாம்.
மத்திய அரசுக்கு, இயல்பாகவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் சிந்தனை இருக்கும். அதேசமயம், நிதிச் சந்தையை வலுவாக வைக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளதால், மத்திய அரசின் கருத்தை ஏற்காமல் மறுக்க முடியும்.
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், நின்று விளையாடி, தன் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பார். அதுபோல, ரிசர்வ் வங்கி,அவ்வப்போதைய நிகழ்வுகளுக்கு கொள்கைகளை மாற்றாமல், அறிவார்ந்த சிந்தையுடன் செயல்படவேண்டும்.சித்துவைப்போல அதிரடியாக செயல்பட கூடாது” என்றார்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

32 mins ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

38 mins ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

51 mins ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

1 hour ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

2 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago