Categories: இந்தியா

ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி….!!

Published by
Dinasuvadu desk
மத்திய அரசு நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிப்பதாகவும், இதை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி நிதி கேட்டு இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.
மத்திய அரசு நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிப்பதாகவும், இதை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி நிதி கேட்டு இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அரசிடம் போதுமான நிதி கையிருப்பு உள்ளதாக கூறிய மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் பொருத்தமான பொருளாதார மூலதன கட்டமைப்பை வரையறுப்பது தொடர்பான பரிந்துரை மட்டுமே தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு நிதி தேவைப்படவில்லை என்றால், அரசின் பதவிக்காலம் இன்னும் 4 மாதமே இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி மீது அழுத்தத்தை கொடுப்பது ஏன்? என அவர் வினவினார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் மேலும் அவர் கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 4½ ஆண்டுகளை கடந்து விட்டது. அதற்கு மேலும் 4 மாதங்கள் மட்டுமே உண்மையான பதவிக்காலம் உள்ளது. அப்படியிருக்க ரிசர்வ் வங்கியின் மூலதன கட்டமைப்பை வரையறுப்பதில் தற்போது அவசரம் காட்டுவதேன்? இந்த விவகாரத்தில் 4½ ஆண்டுகள் அமைதியாக இருந்தது ஏன்?’ என கேட்டுக்கொண்டு உள்ளார்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

15 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

36 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

38 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago