Categories: இந்தியா

ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது…உ.பி. துணை முதல்வர் பேட்டி..!!

Published by
Dinasuvadu desk
அயோத்தியில் ‘ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’ என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பாக நீண்ட காலமாக வழக்கு நடந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 29 முதல் அன்றாடம் விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்டு அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலியுறுத்தியது. பிற இந்து அமைப்புகளும் ஆதரவு கோஷம் எழுப்பும் நிலையில் பா.ஜனதா தலைவர்களும் கோவில் கட்டப்படும் என தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் அயோத்தியில் ‘ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’ என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற மடாதிபதிகள் மாநாட்டில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. இதுபற்றி உத்தரபிரதேச துணை முதல்–மந்திரி கேசவ் பிரசாத் மவுர்யா பேசுகையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா எப்போதும் உறுதியாக இருந்து வருகிறது என்றும், அங்கு ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் கூறினார். என்றாலும் இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருந்து வருவதால் மடாதிபதிகள் மாநாட்டில் வற்புறுத்தப்பட்டது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

16 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

35 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

38 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

47 mins ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

2 hours ago