ராணுவம் அரசியலிலிருந்து விலகி இருக்கவேண்டும் : ராணுவ தளபதி

Default Image

ராணுவம் அரசியலில் இருந்து விலகி இருக்கவேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார். இவர் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனை தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறியதாவது, “ராணுவம் அரசியலில் இருந்து எப்படியாவது விலகி இருத்தல் வேண்டும். சமீப காலமாக ராணுவம் அரசியல் சார்புடையதாக மாறி வருவதைப்பார்க்கிறோம். இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டதாக ராணுவம் இருக்க வேண்டும். அதுவே ஒரு ஜனநாயக நாட்டுக்கு அவசியம் ஆனது ஆகும்.

கடந்த காலங்களில் ராணுவத்தில் அரசியல் குறித்து விவாதிக்க கூடாது என்ற விதி இருந்தது. ஆனால், தற்போது, அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். அரசியல் விவகாரங்களில் தலையிடமால் இருக்கும் பட்சத்தில்தான் ராணுவத்தினரால் சிறப்பாக செயல்பட முடியும்” என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்