ராஜ் பப்பர் அதிரடி உத்தரவு..!

Default Image

உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் ஊடக அமைப்புகளை, அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் இன்று கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநில நிர்வாக அமைப்பு மற்றும் நிதி் விவகார அமைப்புகளில் பதவி வகித்த சிலரையும் அவர் நீக்கியுள்ளார். இதற்கான அறிவிப்புகளை அம்மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ஆர்.பி. திரிபாதி வெளியிட்டார்.

அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் விதமாக, கலைக்கப்பட்ட இடங்களில் திறமையான புதிய நிர்வாகிகள் நியமிக்க உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கலைக்கப்பட்ட உ.பி. மாநில ஊடக அமைப்பு கடந்த இரண்டு மாதமாகவே செயல்படாத நிலையில் இருந்துவந்தது. அதில், 21 பேர் செய்தி தொடர்பாளர்களாக பதவி வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்