Categories: இந்தியா

ராகிங் 3 மணிநேரம் முதலாமாண்டு மாணவனை அடித்த கொடுமை..!

Published by
Dinasuvadu desk

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் ஒருவரை ராகிங் செய்த 2ஆம் ஆண்டு  மாணவர்கள் அவரை 3 மணி நேரம் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள DC மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் அதுல் மோகன். இவரை 2ஆம் ஆண்டு மாணவர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர்.

மாணவர் அதுல் மோகனின் ஒரு கையில் இரும்பு கம்பி ஒன்றையும், செல்போனையும் ஒரு சேர பிடித்துக்கொள்ளுமாறி கூறிவிட்டு அவர்கள் குச்சியால் அடிக்கும் போது எந்தப் பொருளும் கீழே விழுந்துவிடக்கூடாது என்றும் அப்படி விழுந்தால் அடிக்கத்தொடங்குவோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் மாணவர் அதுல் மோகனை அடித்த போது அவர் கையில் இருந்த செல்போன் கீழே விழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து அந்த சீனியர் மாணவர்கள் அவரை சரமாரியாக தாக்கத்தொடங்கியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த மாணவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க எண்ணிய அதுல் மோகன், தனக்கு வலிப்பு ஏற்படுவதாக அவர்களிடம் பொய்யாக கூறியுள்ளார். மாணவர் அதுல் கூறுவது பொய் எனத் தெரிந்ததும் அந்த மாணவர்கள் அவரை கடுமையாக தாக்கத்தொடங்கியுள்ளனர்.

பின்னர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் அதுல் மோகன், சீனியர் மாணவர்களால் தான் 3 மணிநேரங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். அவரின் கை, கால்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மாணவர் மோகன் கடந்த ஜூன் 22 அன்று தான் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அந்தக் கல்லூரியிலும், மாணவர் விடுதியிலும் சீனியர்களால் பகடிவதை எனும் ராகிங் கொடுமையை ஜூனியர் மாணவர்கள் அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அக்கல்லூரியின் முதல்வரிடம் பேசும் போது சம்பவத்தில் ஈடுபட்ட 3 மாணவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அதே போல மாணவர் அதுல் மோகன் சார்பில் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் திரும்பப்பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இருப்பினும் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் திரும்பப்பெறப்படவில்லை என்று மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

1 hour ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

1 hour ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago

இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக.!

கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…

2 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.?

சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…

2 hours ago

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

16 hours ago