ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்..!

Default Image

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

இன்று அதிகாலை நடைபெற்ற அபிஷேக சேவையில் பங்கேற்று தரிசனம் செய்த அமைச்சருக்கு கோயில் இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு தீர்த்த பிரசாதங்களையும் சுவாமி படத்தையும் வழங்கி வேத பண்டிதர்கள் மூலமாக ஆசீர்வாதம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் நாடு நலமுடன் இருக்கவும், செய்யும் பணிகள் சிறப்பாக இருக்கவும் இறைவனை வேண்டிக் கொண்டதாகத் தெரிவித்தார். திருமலையை தேவஸ்தான நிர்வாகம் தூய்மையாக பராமரித்து வருவதாகவும், இதற்கு பக்தர்களும் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் பாராட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்