மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நடிகர் ரஜினிகாந்துக்கு கர்நாடக அணைகளைப் பார்வையிட வருமாறு அம்மாநில முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்றுச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்தில் புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகம் தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் ரஜினிகாந்த் அப்போது கேட்டுக்கொண்டார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள குமாரசாமி, கர்நாடக அணைகளையும், விவசாயிகளின் நிலைமையையும் பார்வையிட ரஜினிகாந்த் அங்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அவ்வாறு கர்நாடகத்துக்கு ரஜினிகாந்த் வருவாரானால், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொள்வார் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார். அணைகளைப் பார்வையிட்ட பின்னும் தண்ணீர் திறந்துவிட ரஜினி கோரினால் அதுபற்றி விவாதிக்கத் தயார் என்றும் குமாரசாமி குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…