ரஃபேல் போர் விமான ஊழலை கேள்வி எழுப்பியதால் சிபிஐ இயக்குநர் மாற்றப்பட்டார் என்று ராகுல் காந்தி கடுமையாக மோடி அரசை சாடியுயுள்ளார்..
ஒரு விவசாயி பயிர்க்கடனைச் செலுத்த முடியாவிட்டால், அவர் வேண்டுமென்றே கடனைச் செலுத்த முடியாதவர் என்று பட்டம் கொடுக்கிறார்கள். ஆனால், கோடிக்கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்களுக்கு வங்கிகள் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து, என்ன உதவி தேவை என்று கேட்கிறார்கள்.
லலித் மோடி லண்டனில் வசித்து வருகிறார். ஆனால், அவர் ராஜஸ்தான் முதல்வர் மகனுக்கு கோடிக்கணக்கில் பணம் அனுப்புகிறார். வங்கிக்கடனைச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பிச் சென்ற விஜய் மல்லையா நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்த பின் தான் நாட்டை விட்டுச் சென்றார். வைர வியாபாரி மெகுல் சோக்சி, நிதி அமைச்சர் ஜேட்லியின் மகளின் வங்கிக்கணக்கில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி இருக்கிறார்.முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்தை பிரதமர் மோடி பயன்பாடில்லாத, உதவாத திட்டம் என்று உதாசினப்படுத்துகிறார்.
மக்களையும், கடினமாக உழைத்துப் பணம் ஈட்டும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் ஆகியோரை ஏமாற்றி அவர்களின் பைகளில் இருந்து பணத்தை எடுத்து 15 முக்கிய தொழிலதிபர்களுக்கு மோடி அரசு கொடுக்கிறது.சமையல் எரிவாயு விலை தொடர்ந்து விலை உயர்ந்து சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. விவசாயிகள், ஏழை மக்கள், சாமானிய மக்கள் வாங்கும் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…