ம.பியில் சிறுவர்கள் தொடர்பான உலகளாவிய பாலியல் வாட்ஸ் அப் குரூப்!பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது !

Published by
Venu

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிறுவர்கள் தொடர்பான சர்வதேச பாலியல் வாட்ஸ் அப் குழுமம் ரகசியமாக நடத்தப்பட்டு வந்திருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பிளஸ் 2 மாணவர் உட்பட மூவரை அம்மாநில சைபர் பிரிவு கைது செய்துள்ளது.

சிறுவர்கள் தொடர்பான பாலியல் குறித்து இயங்கிய வாட்ஸ் அப் குழுமத்தில் இந்தியா, பாகிஸ்தான், சவூதி அரேபியா, வளைகுடா நாடுகள், இலங்கை, மெக்சிகோ, கனடா, வியட்நாம், மெயன்மார், உகாண்டா மற்றும் அல்ஜீரியா உள்ளிட்ட 28 நாடுகளில் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். குவைத் நாட்டின் மொபைல் எண்களில் இருந்து அந்த குழுமத்தில் சிறுவர்களின் பாலியல் படங்கள் அதிகமாக அனுப்பப்பட்டு வந்துள்ளன. இதன் நிர்வாகிகளில் ஒருவராக குஜராத்தைச் சேர்ந்தவரும் இருந்துள்ளார்.

இந்த தகவல் மத்தியப் பிரதேச மாநில சைபர் கிரைம் பிரிவு காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இதை அடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியவர்கள் ம.பி.யின் இந்தோர் மாவட்டத்தின் மாவ் நகரில் இருந்து மக்ரந்த் சலூங்கே (24) எனும் பொறியாளரை கைது செய்துள்ளனர். இவரிடம் கிடைத்த தகவலின் பேரில் தார் மாவட்டத்தில் இருந்து ஓம்கார்சிங் ராத்தோர் (43) எனும் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் கண்டுவா மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர் ஒருவரும் ம.பி. போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.

இது குறித்து ம.பி. மாநில சைபர் கிரைம் பிரிவு எஸ்பியான ஜிதேந்தர்சிங், ‘தி இந்து’விடம் கூறும்போது, ”கைது செய்யப்பட்டவர்கள் மீது ஐபிசியின் தொழில்நுட்பம் மற்றும் சிறுவர்கள் பாலியல் சம்பந்தப்பட்ட பிரிவான 67 பி-யின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மொத்தம் 256 உறுப்பினர்கள் அடங்கிய இந்தக் குழுமத்தில் பெரும்பாலானவர்கள் வடகிழக்கு மற்றும் தென் இந்திய மாநிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் நிர்வாகிகள் அவப்போது மாறியபடி இருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், இதற்காக அந்தக் குழும உறுப்பினர்களிடம் இருந்து கட்டணமாக தொகை எதுவும் வசூலிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. அதேபோல், இந்தக் குழும உறுப்பினர்கள் இடையே வேறுவகையான உரையாடல்கள் இருந்ததா என்பது போன்றவை விசாரணையில் உள்ளன. இதற்காக, குஜராத, வட கிழக்கு மற்றும் தென்னிந்திய மாநில காவல்துறையினருடனும் ம.பி. போலீஸ் தொடர்பு கொள்ள இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago