Categories: இந்தியா

மோடியின் வேண்டப்பட்ட அதிகாரி துணையுடன் மல்லையா தப்பியுள்ளார்..!! ராகுல் விளாசல்.

Published by
Dinasuvadu desk

வங்கிக் கடன் மோசடியில் சிக்கி வழக்கையும் நாடுகடத்தலையும் எதிர்கொண்டு வரும் விஜய் மல்லையா தப்பிச் செல்வதற்கு உதவிய அதிகாரி பிரதமர் மோடிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றம்சாட்டியுள்ளார்.

அன்று லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா தான் லண்டன் வருவதற்கு முன்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகத் தெரிவிக்க அதனைச் சுற்றி கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன.

அருண் ஜேட்லி அது ஒரு முறைசாரா சந்திப்பு, அதில் ஒன்றும் நிகழவில்லை என்று கூற சுப்பிரமணியன் சுவாமி விஜய் மல்லையா மீது கடுமையான லுக் அவுட் நோட்டீஸ் இருந்தது, பயணம் செய்வதைத் தடுக்கும் வலுவான நோட்டீஸ், பயணத்தை தெரிவித்தால் போதும் என்ற நோட்டீஸாக வலுவிழந்ததற்கு யார் காரணம் என்று கேள்வி எழுப்பினார், மேலும் மல்லையா லண்டனுக்கு ஏகப்பட்ட லக்கேஜ்களுடன் பயணித்ததையும் சுட்டிக் காட்டினார் சுவாமி.

இந்நிலையில் பாஜக காங்கிரஸ் மீது குற்றம்சாட்ட, பியூஷ் கோயல், மல்லையா ஒரு குற்றவாளி அவர் சொல்வதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்வதா என்று கேட்டார்.

இந்நிலையில் ராகுல் காந்தி, சிபிஐயில் உள்ள குஜராத் அதிகாரி ஏ.கே.ஷர்மாதான் லுக் அவுட் நோட்டீசை நீர்த்துப் போகச் செய்தவர் இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் வேண்டப்பட்ட அதிகாரி என்றும் குற்றம்சாட்டியதோடு, இதே அதிகாரிதான் நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி தப்பிச் செல்லவும் காரணமாக இருந்தவர் என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

இது குறித்து அவர் தன் ட்விட்டரில், “சிபிஐ இணை இயக்குநர் ஏ.கே.ஷர்மா, விஜய் மல்லையாவின் லுக் அவுட் நோட்டீசை வலுவிழக்கச் செய்தார். இதுதான் மல்லையாத் தப்பிச் செல்ல காரணமாக அமைந்தது. ஷர்மா குஜராத்தைச் சேர்ந்த அதிகாரி. பிரதமர் மோடிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி தப்பிச் செல்லும் போதும் இதே ஷர்மாதான் பொறுப்பில் இருந்தார்” என்று பதிவிட்டுள்ளார்.

DINASUVADU 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

9 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago