துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சிக்கிம் மாநிலத்தில் இன்று முதல் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பாக்யாங்கில் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதால், அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று புறப்பட்ட வெங்கையா நாயுடு பக்தோரா சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள லிபிங் ராணுவ தளத்திற்கு சென்று அங்கிருந்து காங்டாக் நோக்கி தரைமார்க்கமாக செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால், சிக்கிம் மாநிலத்தில் வானம் மேகமூட்டமாக இருந்ததால் அவரால் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. எனவே, தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துள்ளார் வெங்கையா நாயுடு. இதனை டுவிட்டரில் தெரிவித்த வெங்கையா நாயுடு, பக்தோராவில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் இடாநகருக்கு செல்ல உள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…