இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக ஜப்பான் நிறுவனம் 4 ஆயிரத்து 760 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.2008 ஆம் ஆண்டு ஜப்பானின் ஜே.ஐ.சி.ஏ நிறுவனம், சென்னையில் மெட்ரோ ரயில் முதற்கட்ட பணிக்காக 11ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
தற்போது இரண்டாம் கட்ட பணிக்காக 4 ஆயிரத்து 760 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய நிதித்துறை அமைச்சகம் மற்றும் ஜப்பானின் ஜே.ஐ.சி.ஏ கையெழுத்திட்டன. இதன்மூலம் மாதவரம்-சிப்காட்,மாதவரம- சோழிங்கநல்லூர், சிஎம்பிடி-லைட் ஹவுஸ் ஆகிய தடங்களில் 107 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ பணிகள் நடைபெற உள்ளன.
முதற்கட்டமாக இந்தப் பணிகளுக்கு 83 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகையால் ஏற்படும் மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் பணிக்கு நிதிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மத்திய நிதித்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…