மெகபூபா முப்தியை அவதூறாக பேசிய பா.ஜ.க. முன்னாள்அமைச்சரின் சகோதரர் கைது..!

Default Image

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஹிராநகர் பகுதியில் கடந்த மாதம் பேரணி ஒன்று நடைபெற்றது. அதில், முன்னாள் பா.ஜ.க. மந்திரி லால் சிங்கின் சகோதரரான ராஜிந்தர் சிங் அலியாஸ் பாபி என்பவர் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியை அவதூறாக பேசியுள்ளார்.

அவர் பேசிய வீடியோ சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, அவர் மீது காஷ்மீர் போலீசார் அவதூறு வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதியப்பட்டதை அடுத்து, ராஜிந்தர் சிங் அலியாஸ் கைது நடவடிக்கைகளுக்கு பயந்து தலைமறைவானார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் அவரை இன்று கைது செய்துவிட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்