மும்பை தீவிரவாத தாக்குதலின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர், நவம்பர் 26-ம் தேதி சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாஜ் நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு இடங்களில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர்.
300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 3 நாட்கள் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்புக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.மும்பை கோர தாக்குதல் சம்பவத்தின் 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, மும்பை நகரின் பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
dinasuvadu.com
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…