மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை அந்தேரி மரோல் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான காம்கார் என்ற தொழிலாளர் நல மருத்துவமனையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. மாலை 4 மணி அளவில் நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மருத்துவர்கள்,பணியாளர்கள், பார்வையாளர்கள் என ஏராரளமானோர் ஒரே நேரத்தில் தப்பி ஓட முயன்றதால் பெரும் பதற்றம் நிலவியது. மொத்தம் 12 வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கிடையே காயமடைந்தவர்களில் 2 பேர் இன்று பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தை மாநில அரசு அறிவித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…