மும்பை அரசு மருத்துவமனை தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு…!!

Default Image

மும்பை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை அந்தேரி மரோல் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான காம்கார் என்ற தொழிலாளர் நல மருத்துவமனையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. மாலை 4 மணி அளவில் நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மருத்துவர்கள்,பணியாளர்கள், பார்வையாளர்கள் என ஏராரளமானோர் ஒரே நேரத்தில் தப்பி ஓட முயன்றதால் பெரும் பதற்றம் நிலவியது. மொத்தம் 12 வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இந்த தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கிடையே காயமடைந்தவர்களில் 2 பேர் இன்று பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தை மாநில அரசு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்