மும்பை:பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ..! 45 பேர் படுகாயம்..!!

Default Image

மும்பையில் பெட்ரோலிய எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 பேர் படுகாயமடைந்தளனர்.
செம்பூர் அருகே மாஹுல் காவோன் (mahul gaon) இடத்தில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
இங்கு நேற்று மாலை கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பகுதியில், இயந்திரத்தில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக திடீரென தீப்பிடித்தது.பெட்ரோல் மூலப் பொருள்கள் வைக்கும் 2 குடோன்களும் தீப்பிடித்து எரிந்தாதல் அப்பகுதி முமுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
தீயை கட்டுப்படுத்த 7 தீயணைப்பு வாகனங்களும்,ரசாயன பொடியைத் தூவும் இருவாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்த தீ விபத்தில் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்