திரிபுராவில் முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்காரின் காரை மறித்து பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தியதால், அவர் திரும்பிச் சென்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணிக் சர்க்கார், நேற்று தலாய் ((dhalai)) மாவட்டத்தில் ஒரு மலைகிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றார். ஆனால், அவர் அங்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், மாணிக் சர்க்காரின் பாதுகாப்பு அதிகாரிகளின் காரை வழிமறித்தனர்.
கொட்டும் மழையிலும், மாணிக் சர்க்காரை தடுத்து நிறுத்தும்வகையில் முழக்கங்களை எழுப்பியவாறே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் மாணிக் சர்க்கார் அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…