நாடு முழுவதும் நேற்று குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில் பாலிவூட் நடிகர் அனுராக் காஷ்யப் குடியுரிமைச்சட்டம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:
மோடி முதலில் அவருடைய கல்விச் சான்றிதழ்களை வெளியிட வேண்டும். அதன் பின்னர், அவருடைய பிறப்புச் சான்றிதழையும் அவருடைய அப்பாவின் பிறப்புச் சான்றிதழையும் வெளியிட வேண்டும்.இதன் பின்பு தான் குடிமக்களிடம் ஆவணங்களைக் கேட்கவேண்டும். அரசால் ஒரு கேள்வியைக் கூட எதிர்கொள்ள முடியவில்லை.இந்த அரசிற்கு ஒரு திட்டமும் இல்லை. மேலும் அவர்களால் ஒரு திட்டத்தை கூடக் கொண்டுவர முடியாது. இது குப்பை அரசு குடியுரிமைத்திருத்தச் சட்டம் என்பது பண மதிப்பு நீக்கம் போன்றதே தவிர இது பற்றி அவர்களுக்கு ஒரு பார்வையும் கிடையாது என்று கடுமையாக சாடியுள்ளார்.
பாலிவூட் நடிகர் அனுராக் காஷ்யப் இவர் தமிழில் நடிகை நயந்தாராவின் இமைக்க நோடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பம் முதலே குடியுரிமை திருத்தச் சட்டத்தினை கடுமையாக எதிர்த்து வந்த இவர் அண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து மும்பையில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…