மீண்டும் மோடியே பிரதமராவார்!
லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் , அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று மோடியே மீண்டும் பிரதமராவார் என தெரிவித்தார். மதவாத கருத்துக்கள் கூறும் பாஜக தலைவர்கள் அதை தவிர்க்க வேண்டும் என அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ராம்விலாஸ் பஸ்வான் சமீபத்தில் விமர்சித்திருந்தார். இதனையடுத்து பாஜக கூட்டணியிலிருந்து லோக் ஜனசக்தி விலகும் என கூறப்பட்டது.
இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த பஸ்வான் தெரிவித்ததாவது: பாஜக தலைமையிலான, தே.ஜ., கூட்டணியிலிருந்து, லோக் ஜனசக்தி கட்சி விலகும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெறும். மோடி தான், மீண்டும் பிரதமராவார்; இதில் மாற்றமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.