ஹரியானா பாஜக தலைவர் கணேஷி லால் ஒடிசா ஆளுநராகவும் கேரள பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் மிசோராம் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பீகார் ஆளுநர் சத்யபால் மாலிக் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஒடிசாவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் ஒடிசாவின் புதிய ஆளுநராக கணேஷிலாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். கணேஷி லால் தற்போது பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் ஹரியானா பாஜக தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இதே போல் மிசோராம் ஆளுநர் நிர்பாய் ஷர்மாவின் பதவிக்காலம் வரும் 28ம் தேதியோடு முடிவடையும் நிலையில், கும்மனம் ராஜசேகரன் அம்மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜசேகரன் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகாரராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர்.
தற்போது கேரள பாஜக தலைவராக இருக்கும் ராஜசேகரன், கேரளாவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புக்களை இந்து ஐக்கிய வேதி என்ற ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…