Categories: இந்தியா

மாவோயிஸ்ட் தாக்குதல் :தூர்தர்ஷன் கேமரா மேன், 2 போலீஸ் பலி…!!

Published by
Dinasuvadu desk

தேர்தல் சம்பந்தமான செய்தி சேகரிக்க தூர்தர்ஷன் ஊழியர்கள் சத்தீஸ்கர் சென்றிருந்தனர்.

சத்தீஸ்கர் பகுதியில் நகசல் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஒரு கேமரா மேன் உயிரிழந்துள்ளார். மேலும், அந்தத் தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் தண்டேவாடா பகுதியில் தேர்தல் பணிகள் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியின் அரண்பூர் காட்டில் தான் நடந்துள்ளது. “எங்கள் குழுவினர் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக அங்கு சென்றிருந்தது. அவர்களுடன் தூர்தர்ஷன் தொலைக்காட்சி குழுவினரும் இருந்தனர்” என்று டி.ஐ.ஜி சுந்தர் ராஜ் தெரிவித் துள்ளார்.உயிரிழந்தது அச்சுதானந்த் என்று தூர்தர்ஷன் கேமரா மேன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, சத்தீஸ்கரில் உள்ள பிஜாப்பூரில் சி.ஆர்.பி.எப்-யைச் சேர்ந்த நான்கு படை வீரர்கள் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மற்றும் இரண்டு சி.ஆர்.பி.எப் படைவீரர்கள் குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.சத்தீஸ்கரின் 90 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கவிருக்கிறது. நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்திய பகுதி தேர்தலின் முதல் கட்டத்தில் நடைபெறுகிறது.
நேற்று சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டிருந்த மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ” கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாவோயிஸ்ட் தாக்குதல் 150-இல் இருந்து 78-80-ஆக குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

1 hour ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

2 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

2 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

2 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

2 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

3 hours ago